Sunday, November 20

கல்முனை மாநகரை தென்னாபிரிக்க மாநகரமொன்றுடன் இணைப்பது தொடர்பில் பேச்சு



(எம்.எம்.ஜெஸ்மின்)
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கhவின் அவிபிருத்திக்கான பிரதி அமைச்சர் இப்றாஹிம் இஸ்மாயில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் இன்று சனிக்கிழமை பேச்சு நடத்தியுள்ளார்.
சமகால அரசியல் விடயங்கள் கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பின் போது, தென்னாபிரிக்காவிலுள்ள மாநகர சபையொன்றுடன் கல்முனை மாநகர சபையை இணைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்

இச்சந்திப்பில், இலங்கைக்கான தென்னாபிரிக்கா தூதுவர் ஜியொ பெரியோ டொயிஜ், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் கல்முனை பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
படங்கள்: தமிழ்மிரர்



No comments:

Post a Comment