Tuesday, November 22

கல்முனை மாநகர சபைக்கான முத்திரை வரி நிலுவையை வழங்க அனுமதி

kalmunaimc

திறைசேரியினால் கல்முனை மாநகர சபைக்கு வழங்க வேண்டியிருந்த முத்திரை வரி நிலுவையில் ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கினங்க 11 மில்லியன் ரூபா முத்திரை வரி நிலுவை காசோலையாக வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கல்முனை மாநகர சபைக்கு 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கான முத்திரை வரி 21 மில்லின் ரூபா திறைசேரியினால் வழங்க வேண்டியிருந்தது. இதில் ஒரு தொகையே தற்போது காசோலையாக வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரதி மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரின் முயற்சியினாலேயே குறித்த நிலுவை பணம் மாநகர சபைக்கு கிடைக்க பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment