Thursday, November 24

நிந்தவூரில் இரும்பினால் தாக்கப்ட்டவர் வபத்தானார்




வீதியில் சைக்கிளில் சென்ற ஒருவருக்கு எதிரே ஓட்டோவில் வந்த மூவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது. ஆட்டோவில் வந்தவர்கள் இரும்புக்கம்பியால் தாக்கியதில் சைக்கிளோட்டி மரணமானார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நிந்தவூர் 13 ஆம் பிரிவைச்சேர்ந்த இப்ராலெவ்வை அபுல் ஹசன் (வயது46) என்ற குடும்பஸ்தரே மரணமாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
நிந்தவூர் பிரதான வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பிரஸ்தாப நபர் எதிரில் வந்த ஓட்டோ வீதியில் தேங்கிநின்ற வெள்ள நீரை அடித்துச் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமுற்ற அவர் ஓட்டோவில் வந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

நிலைமை மோசமானது. ஓட்டோவில் வந்தவர்கள் இவரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டுச் தப்பிச் சென்றுவிட்டனர். தலையின் பின்புறத்தில் படுகாயமடைந்த இவரை நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற சமயம் இடைவீதியில் உயிர் பிரிந்துவிட்டது. சம்பவம் தொடர்பாக சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment