Thursday, November 17

ஒலுவில் ஊடாக மாத்தறையிலிருந்து மட்டக்களப்புக்கு புதிய புகையிரத வீதி


மாத்தறையிலிருந்து மட்டக்களப்பு வரை புதிய புகையிரத வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திட்டப்பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான புதிய புகையிரத வீதியை நிர்மாணிப்பதற்காக ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாத்தறை, பெளியத்த, ஹம்பாந்தோட்டை ஊடாகவும் மொனராகலை, அம்பாரை ஒலுவில் ஊடாகவும் மட்டக்களப்பு வரையிலான இந்த புதிய புகையிரத வீதியை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வீதியை நிர்மாணிப்பதற்கான ஆய்வு நடவடிக்கைளை மேற்கொள்ள இலங்கை புகையிரத சேவையும், போக்குவரத்து அமைச்சும் நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு சிறந்த புகையிரத சேவையை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

No comments:

Post a Comment