Thursday, November 24

கிழக்கு மாகாணத்தின் மிக நவீன விளையாட்டு மைதானமாக வெபர் மைதானம் மாறுகின்றது.


கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மட்டக்களப்பு நகரில் மிகப்பிரபல்யமான இவ்விளையாட்டு அரங்கை அடுத்த ஆண்டு நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு முதல்வரிடம் அவர் உறுதியளித்தார். இதன் அடிப்படையில் தற்போது அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெபர் விளையாட்டு மைதானத்தின் புனர் நிர்மாணம் தொடர்பான முதலாவது பூர்வாங்க ஆயுவு கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனினால் மட்டு மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது. இவ்வைபவத்தில் மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநாகர மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment