Thursday, November 24

இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையினை இறக்காம பிரதேச சபையின் கீழ் செயற்படுத்த ஏ.எம். ஜெமீல் கோரிக்கை


அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையினை இறக்காம பிரதேச சபையின் கீழ் கொண்டு வந்து மாதம் ஒன்றுக்கு முப்பது இலட்சம் ரூபா இலாபத்தினை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியினை ஏற்படுத்த முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பிப்பினருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

திருகோணமலையில் இடம்பெற்ற கிழக்குமாகாணசபை அமர்வில் முதலமச்சருக்கான அமைச்சுக்கள் சம்மந்தமான வரவு செலவு முன்மொழிவின் போது மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு உரைநிகழ்த்தினார்.

இக்கோரிக்கைக்கு பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அதற்குறிய நடவடிக்கைகளை மேற் கொள்வதாக மாகாணசபை உறுப்பினரிடம் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment