Thursday, December 29

கல்முனை ஸாஹிராவின் சாதனை வீரர்களுடன் AIMS அமைப்பினரின் ஒரு சந்திப்பு

Meeting with AIMS

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி வழமை போன்று இம்முறையும் தமது ஆதிக்கத்தை அம்பாறை மாவட்டத்தில் தக்க வைத்துக்கொண்டது .
இதன்படி இறுதியாக வெளியாகிய க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் பொறியியல் பீடத்திற்கு 11 மாணவர்களும் மருத்துவ பீடத்திற்கு 2 மாணவர்களும் முகமைத்துவ பீடத்திற்கு 6 மாணவர்களும் கலைப்பீடத்திட்கு 4 மாணவர்களும் மற்றும் உயிரியல் , பௌதிகவியல் துறைகளுக்கும் கணிசமான அளவு மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழையும் வாய்ப்பினை பெற்றுள்ளனர் .
இவர்களை கௌரவிக்கும் முகமாக AIMS அமைப்பினர் இன்று ஒரு சினேக பூர்வ ஓன்றுகூடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர் இதில் இம்மனவர்களுடன் AIMS உறுப்பினர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சமூகத்தின் மீதுள்ள பொறுப்புகள் பற்றியும் தெளிவு படுத்தப்பட்டது .

No comments:

Post a Comment