Friday, December 2

சாய்ந்தமருது சிம்ஸ் கெம்பஸில் இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


cims 2
சாய்ந்தமருது சிம்ஸ் கெம்பஸில் கணினி துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் சிம்ஸ் கெம்பஸ் முகாமைத்துவ பணிப்பாளர் அன்வர் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யு.எஸ்.எயிட் நிறுவன திட்ட அபிவிருத்தி முகாமையாளர் நேசராசா தம்பிராஜா பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனூசியா சேனாதிராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.





வசதி குறைந்த மாணவர்களும் உயர் கணினி கற்கை நெறியினை பயிலும் வகையில் புலமைப்பரிசில் திட்டத்தின் அடிப்படையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறந்த தொழில் வாயப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த கற்கை நெறிகள் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தன.


No comments:

Post a Comment