Thursday, December 8

தேசிய ஆய்வரங்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்



(யு.கே.காலித்தீன்)
பிராந்திய அபிவிருத்தி சம்மந்தமான தேசிய ஆய்வரங்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
கலை கலாச்சா பீடாதிபதி கே.எம்.எம். பழீல் ஹக் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆய்வரங்கானது எதிர்வரும் சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 04.00 மணிவரை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்ஆய்வரங்குக்கு பிரதம பேச்சாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் போராசிரியர் அச்சி எம். இஸ்காக் கலந்து கொள்வதோடு பிரதம அதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கௌரவ போராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.


மேலும் இவ்வாய்வரங்கில் பிராந்திய அபிவிருத்தியோடு தொடர்புபட்ட பல்வேறு கலந்துறையாடல்களும் இடம்பெறவிருப்பதாக ஆய்வரங்கின் இணைப்பாளர் கலாநிதி எம்.ஐ.எம். கலீல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment