Thursday, December 29

மருதமுனை பிரதேசத்தில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த போதைப் பொருட்கள் மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனைப் பிரதேசத்தில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தயாராக இருந்த கஞ்சா கலந்த போதைப்பொருள் மட்டு.அம்பாறை மது வரித் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளது.
மட்டு. அம்பாறை மாவட்ட மது வரித்திணைக்கள அத்தியட்சகர் தலைமையிலான குழுவினரின் இப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
பொது மக்களிடமிருந்த கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, இப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக அத்தியட்சகர் துசாதரன் தெரிவித்துள்ளார்.
கஞ்சா கலந்த லேகியம், கொக்கென், சக்கரை உள்ளிட்ட பொருள்கள் அடங்குவதாகவும் இவ்வாறு மீட்கப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 10 லட்சத்திற்கும் அதிகம் என அத்தியட்சகர் துசாதரன் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு கல்முனைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment