Tuesday, January 31

மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமற்றவை !அமைச்சர் அதாவுல்லா தெரிவிப்பு


மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமற்றவை என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள நாமல் ஓயா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இப்போது நாம் அச்சம் பீதியின்றி சந்தோஷமாக வாழுகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் ஓரிருவர் தங்களது அரசியல் நலன்களுக்காக மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். இது இந்தச் சின்னஞ்சிறிய தேசத்திற்கு தேவையற்றதாகும்.

No comments:

Post a Comment