Tuesday, January 31

கிராம சேவக உத்தியோஸ்த​ர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராம சேவக உத்தியோஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இரவு சீபிரீஸ் உணவக கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.

தென்கிழக்கு சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.வை.எம்.ஜிப்ரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவ்வமைப்பின் ஸ்தாபகரும் கொம்டெக் கல்வியகத்தின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம சேவை உத்தியோஸ்தர்களுக்கான நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எஸ்.எம்.நழீர் , தென்கிழக்கு சமூக நலன்புரி அமைப்பின் செயலாளர் எம்.எச்.ஏ.ஹலீம், பொருளாளர் ஸீ.எம்.ஏ.முனாஸ் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


இதன்போது, சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏற்பட்ட சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலவழிகளிலும் செயல்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதில் மிகவும் சிறப்பாக செயற்பட்டமைக்காக கிராம சேவக உத்தியோஸ்தர்கள் பாராட்டி பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.(S)




No comments:

Post a Comment