Tuesday, May 8

மருதமுனை வேன் விபத்தில் சிக்கி ஒருவர் மரணம்; இருவர் ஆபத்தான நிலையில்!

 

(செயிட் ஆஷிப்)
மருதமுனையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த வேன் ஒன்று ஹபரணை 32ஆம் மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளானதால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுள் இருவரின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஹசன் மௌலவியின் இளைய புதல்வரான அல்-ரஸ்ஸான் (வயது35) என்பவரே உயிரிழந்துள்ளார். இவரே வாகனத்தை செலுத்திச் சென்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த அனைவரும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு பெண்ணும் இரு சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்களுள் ஆபத்தான நிலையிலுள்ள இருவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து மருதமுனை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் ஹபரணை 32ஆம் மைல்கல் பகுதியில் வாய்க்கால் ஒன்றினுள் வீழ்ந்து பின்னர் மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. சாரதி தூக்க மயக்கத்தில் வானை செலுத்தியிருக்கலாமென சந்தேகிப்பதாக ஹபரணைப் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment