Thursday, May 31

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகளிர் வித்தியாலய வைரவிழா மரதன் ஓட்டப் போட்டி


சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகளிர் வித்தியாலய வைரவிழாவினை முன்னிட்டு மரதன் ஓட்டப் போட்டி நிகழ்வு நேற்று காலை இப்படசாலையின் முன்றலில் ஆரம்பித்து கல்முனை பொலிஸ் வீதி ஊடக சென்று இலங்கை வங்கி சுற்று வட்டம், ஹிஜ்ரா சந்தி ஊடாக மீண்டும் பாடசாலை முன்றலை வந்தடைந்தது.


பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஐ.எல்.ஏ.றஹீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் ,
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைமுனா அஹமட் , சாய்ந்தமருது சம்பத் வங்கி முகாமையாளர் முஹம்மட் முஸம்மில், அம்பாறை மாவட்ட வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.முபாறக், கல்முனை அவுரா ஜுவலரி உரிமையாளர் பர்விஸ் அமீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் உட்பட பாடசாலை அதிபர்கள் மற்றும் விளையாட்டுத்துறை சார் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
மரதன் ஓட்டப் போட்டியில் போட்டியில் முதலாம் இடம் பெற்ற மாணவனுக்கு பைசிகிளும், இரண்டாம் இடம் பெற்ற மாணவனுக்கு மின் விசிறியும், மூன்றாம் இடம் பெற்ற மாணவனுக்கு றைஸ் குக்கறும் பரிசாக வழங்கப்பட்டதோடு பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த மரதன் ஓட்ட போட்டிகளுக்கு பூரண அனுசரணை வழங்கியிருந்தது. கல்முனை அவுரா ஜுவலர்ஸ் என்பது குறிப்பிடத் தக்கது.




















No comments:

Post a Comment