Thursday, June 28

2013 கிழக்கில் இடம்பெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கான திட்டமிடல் பணிகள் ஆரம்பம்


2013 தேசத்திற்கு மகுடம் கண் காட்சியின் அபிவிருத்தி திட்டங்கள் மட்டக்களப்பு, பொலநறுவை, திருகோ ணமலை அம்பாறை, மாவட்டங் களிலும் அமுல்ப்படுத்த, திட்டமிடல் அமைச்சு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய, இந்த அபிவிருத்தி பணிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுல்பப்டுத்த வேண்டிய திட்டங்களை திட்டமிடும் விசேட கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்சேழியன், மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் மற்றும் உள்ளுர் திணைக்கள தலைவர்கள், திட்டமிடல் அதிகாரிகள் என பலரும், பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த திட்டத்தின் கீழ் அமுல்ப்படுத்தக்கூடிய வீதிகள், பாலங்கள், சிறிய நீர்ப்பாசன குளங்களின் புனரமைப்பு, விவசாயம், கல்வி, நீர்வழங்கல் மற்றும் மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தல், மின்சார அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழியப்பட்டு, மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுமதிக்கப்பட்டது.

இவ்விதம் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினால் அங்கீகாரம் வழங்கியதும், மாவட்டத்தில் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment