Friday, March 22

அட்டாளைச்சேனை பெண்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)





அட்டாளைச்சேனை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்திப்பரிவு மற்றும் மனித எழச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகளை  வெளியிடும் போது 'அரச அறிவித்தல்-பெண்களுக்கு எதிரான வன்முறை தண்டனைக்குரிய குற்றம்' என காட்சிப்படுத்தல் வேண்டும் எனக் கோரி அமைதி ஊர்வலமும், மகஜர் கையளிப்பும் இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக இடம் பெற்றது. இதன் போது பிரதேச மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் பதாதைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுக்கக் கோரும் சுலூக அட்டைகளுடன் ஊர்வலாமாகச் செல்வதையும், உதவி பிரதேச செயலாளர் எஸ். ஜெயரூபனிடம் மகஜர் கையளிப்பதையும், மகளிர் அபிவிரத்தி உத்தியோகத்தர் எம்.வை.எம்.சுஹிறா மற்றும் மனித எழுச்சி நிறுவனத்தின் உத்தியொகத்தர் எம்.பவானி, மகளிர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி ஜனுசா உள்ளிட்டோர் முறையிடுவதையும் காணலாம்.
 

No comments:

Post a Comment