Monday, March 25

உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சாய்ந்தமருதை சேர்ந்த எம்.ஸி. ஆதம்பாவா நீதியரசர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளருமான எம்.ஸி. ஆதம்பாவா கொழும்பு உயர்நீதிமன்ற வளாகத்தில் நான்கு நீதியரசர்கள் முன்னிலையில் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தனது 76 வது வயதில் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட எம்.ஸி.ஆதம்பாவா கல்முனைக்குடியை பிறப்பிடமாகவும் காரைதீவு மாளிகைக்காடு பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்.
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயம் , கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் பயிற்சிபெற்ற கணித பாட ஆசிரியரும் பேரதெனிய பல்கலைக்கழக பட்டதாரியுமாவார்.
கல்முனைக்குடியைச் சேர்ந்த முஹம்மது காசிம் ( கணக்கப்பிள்ளை) செமிலத்தும்மா தம்பதிகளின் தலைமகனுமாவார்.

No comments:

Post a Comment