Saturday, March 30

அக்கரைப்பற்றில் வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது - ஒருவர் வபாத்



(ADT) அக்கரைப்பற்று, ஆலின் நகர் பிரதேசத்தில் அயலவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அயலவர்கள் மூவருக்கிடையே நேற்று (29) இரவு 12.30 மணியளவில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 
இதன்போது இருவர் சேர்ந்து ஒருவரை தாக்கியுள்ளனர்.  இதன் காரணமாக காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று அதார வைத்தியசாலையில் நேற்று இரவு உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.  எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்தவர் 42 வயதான சுலமா லெப்பை ஜெலில் என தெரியவந்துள்ளது.  இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment