Tuesday, March 26

தயட்டகிருலவை முன்னிட்டு கிழக்கில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளின் முதலாம் தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக   கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்துள்ளார்.


இதனால் எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை ரீதியாக நடத்தப்படும் முதலாம் தவணை பரீட்சைகளை எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்கும்படி அறிவுறுத்தப்படுள்ளது என எம்.ரீ.ஏ.நிசாம் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர்களின் வேண்டுகோளினை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பாடசாலை மாணவர்கள் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட முடியும் எனவும் மாகாண கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment