Monday, March 25

கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்



கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் மற்றும் மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்களை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீட்டிற்கு அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வும் நேற்று (24.03.2013) மாலை சீ பிறீஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருலாளர் ஏ.சி.எகியாக் கான் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment