Thursday, April 4

கிழக்கு மாகாண கலாசார விளையாட்டு நிகழ்வு ஆரம்பம்!

7
-KRM.றிஸ்கான்-  2013 ம் ஆண்டுக்கான தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட் கிழக்கு மாகாணத்திற்கான பிரதான கலாசார விளையாட்டு நிகழ்வு இன்று காலை திருகோணமலை கடற்கரையில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலம மற்றும் சமயத் தலைவர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி கொடியோற்றி ஆரம்பித்து வைத்தனர்.
திருகோணமலை கோணலிங்க வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இந்நிகழ்வு நாளையும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
இதில் சைக்கிலுலோட்டப் போட்டிகள், பானை உடைத்தல், ஊசி கோர்த்தல் போன்ற கலாச்சார நிகழ்வுகள் பல இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9

No comments:

Post a Comment