Friday, April 5

பாலமுனை அல் ஈமானிய்யா அறபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா


பாலமுனை அல் ஈமானிய்யா அறபுக் கல்லூரியின் முதலாவது    அல் - ஹாபிழ் கௌரவிப்பு விழா எதிர்வரும் 2013.04.06 ஆம் திகதி சனிக்கிழமை;தொடர்ந்து மாலை 04.00 மணிக்கு  கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக் ஏ.எல்.மௌஜூத் (பாகவி) தலைமையில் இடம் பெறவுள்ளது. 
இதில் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் 'ஷைகுல் பலாஹ்' அஷ்ஷேக் எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி; சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி அதிபர் 'ஷைகுத் தப்லீகி' அஷ்ஷேக் எம்.பி.அலியார் (தேவ்பந்தி) ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், விஷேட சொற்பொழிவாளர்களாக அஷ்ஷேக் ஏ.ஆர்.அப்துர் ரஹ்மான் (மழாஹிரி) அஷ்ஷேக் அலி அஹ்மத் (றஷாதி) அஷ்ஷேக் எம்.எச்.எம்.சாதிக் (ஷாஹிமி, மழாஹிரி) ஆகியோர்களும், முன்னிலை அதிதிகளாக  உதவிக் கல்விப்பணிப்பாளருமான ஏ.சாஹூல் ஹமீத், பாலமுனை ஜூம் ஆப் பள்ளிவாசல் தலைவர் யு.எல்.அபூபக்கர் ஆகியோர்களும் கௌரவ அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் மௌலவி, ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு : பெண்களுக்கான இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment