Thursday, April 4

கல்முனை மேயரால் சாஹிறா தேசிய பாடசாலைக்கு ஒரு தொகுதி கராத்தே உடை அன்பளிப்பு


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் கல்முனை சாஹிறா தேசிய பாடசாலைக்கு ஒரு தொகுதி கராத்தே உடை மற்றும் கை உறை என்பன இன்று(03) முதல்வர் செயலகத்தில் வைத்து  வழங்கிவைக்கப்பட்டது.

அத்தோடு டெக் லேங் ஆங்கில பாலர் பாடசாலையின் பாவனைக்காக ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரைகளும் முதல்வரினால் வழங்கிவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வின்போது மாநகர ஆணையாளர்  ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர் எம்.எல்.சாலிதீன், கல்முனை சாஹிறா தேசிய பாடசாலை அதிபர் ஏ. ஆதம்பாவா, முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment