Sunday, April 14

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



ஜனாதிபதி செயலகமும் சிறுவர்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கததையும் ஏற்படுத்தும் அமைப்பும் கல்முனை கிறிஸ்தவ இல்லமும் இணைந்து கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் ஒழுங்கு செய்திருந்த ” நம்ம ஊரில் நத்தார் ” நிகழ்வில் கலந்து கொண்டு இனங்களுக்கிடையிலான பரஸ்பர ஒற்றுமை மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றை சித்திரம் வரைதல் மற்றும் ஆக்கத் தொழிற்பாடு மூலம் வெளிப்படுத்திய கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் அண்மையில் பாடசாலையில் வைத்து மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.


பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர் யு.எல்.எம்.அமீன் , உதவி அதிபர்  எம்.எச்.அன்சார் , சித்திர பாட ஆசிரியர் எஸ்.எம்.எம்.றம்ஸான்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment