Wednesday, April 3

தமிழ் முஸ்லிம் மக்களிடையே குரோதத்தை வளர்க்கவே ஹர்தால் அழைப்பு – TNA கூட்டாக அறிக்கை


tna new-
நாளை (4.4.2013) மட்டக்களப்பில் ஹர்தால் செய்யுமாறு ஆதி திராவிட சேனா என்ற பெயரில் வெளியிட்ட பிரசுரமானது தமிழ் முஸ்லிம் மக்களிடையே குரோதத்தை வளர்த்து அதில் குளிர்காய நினைப்போரின் சதி நடவடிக்கையாக இருக்குமென சந்தேகிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்ததை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இன்று(3.4.2013) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஹலாலுக்கு ஆதரவாகவும் பொதுபல சேனாவுக்கு எதிராகவும் முஸ்லிம்கள் செய்த கடையடைப்புக்கு எதிராக எதிர் வரும் 4ம் திகதி நாளை கடையடைப்பு செய்யுமாறு ஆதி திராவிட சேனா என்ற பெயரில் மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் யார், இவர்களின் தலைவர் யார், இவர்களின் கொள்கை என்ன, என்பது யாருக்கும் தெரியாது. வெறுமனே அனாமோதய துண்டுப்பிரசரங்கள் மூலம் மக்களை குழப்பத்துக்கும் சங்கடத்துக்கும் உட்படுத்தும் செயற்பாடாகவே நாம் இதனை நோக்குகின்றோம்.
தமிழ் முஸ்லிம் மக்களிடையே குரோதத்தை வளர்த்து அதில் குளிர்காய நினைப்போரின் சதி நடவடிக்கையாக இது இருக்கு மென சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எனவே இந்த துண்டுப்பிரசுரத்திற்கும் அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கும் கடையடைப்பு வேண்டுகோளுக்கும் எமக்குமிடையே எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment