Tuesday, May 21

கல்முனையில் வீதியால் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு


கல்முனை ஆதார வைத்தியசாலை அருகில் வீதியால் நடந்துசென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த1 இலச்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிளியை மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த இருவர் அறுத்து எடுத்துச் சென்ற சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.


கல்முனை எல்லை வீதியைச் சேர்ந்த பெண் சம்பவதினமான நேற்று மாலை 6.00 மணியளவில் உறவினர் வீடு ஒன்றிற்கு செல்வதற்காக ஆதார வைத்தியசாலை அருகில் உள்ள வீதியின் 2ம் குறுக்குத் தெருவீதியால் நடந்து சென்று கொண்டிருந்த போது  பின்னால் பள்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கழுத்தில் இருந்த சங்கிலியை அபகரித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பெண் கூச்சல் இட்டதையடுத்து அயலவர்கள் வந்தபோது தனக்கு நேர்ந்த கதியினை கூறிய பின்னர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை  கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment