Wednesday, July 17

பயணிகள் பஸ்ஸில் கல்முனைக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டன

கொழும்பில் இருந்து பயணிகள் பஸ்ஸில் கல்முனைக்கு கொண்டவரப்பட்ட ஒருதொகை சட்டவிரோத சிகரட்டுகள் இன்று புதன்கிழமை கல்முனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
kalmunai
இன்று அதிகாலை 4.30 மணிக்கு கல்முனை பிரதான வீதியிலுள்ள தேநீர் கடை ஒன்றின் அருகே பஸ்ஸில் கொண்டுவரப்பட்ட பொதிகளை இறக்கும்போது பொலிஸாரினால் இந்த சட்டவிரோத சிகரட்
கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து சம்மாந்துறைக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் போதே இந்த சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறைக்கு செல்லவேண்டிய பயணிகளை கல்முனையில் இறக்கிவிட்டு பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு பஸ்ஸை எடுத்துச்சென்றனர். இதனால் கொழும்பில் இருந்துவந்த பயணிகள் செய்வதறியாது தெருவோரத்தில் நின்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.
பஸ்ஸுடன் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரட்டும், சாரதியும் கல்முனை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதுடன் இது சம்மந்தமான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment