Monday, June 18

என்னை பற்றிய அமைச்சர் பௌஸியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: ஹிஸ்புல்லா




சிரேஷ்ட அமைச்சர் பௌஸி என்னை பற்றி கூறியிருப்பதானது அப்பட்டமான பொய்யாகும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏஎ.ம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியிலுள்ள செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா,

முஸ்லீம் காங்கிரசை போன்று நாங்கள் கந்தூரி கிடாரங்கள் அல்ல; சாய்ந்தமருதில் அமைச்சர் உதுமாலெப்பை தெரிவிப்பு!



‘சிலர் இப்போது மஹிந்த கம்பனி என்று கூறுகின்றார்கள் உண்மைதான் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச அவர்களை தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லா அமைச்சரின் தீர்க்க தரிசனத்தால் எங்களின் வாக்குகளின் ஊடாக ஜனாதிபதியாக ஆக்கினோம் அதனுடாக தேசிய காங்கிரசும் மகிந்த கம்பெனியில் பங்குதாரர்கள்’
சாய்ந்தமருதில் வீதிகளை அமைத்தல் மற்றும் உட்கட்டமைப்பு நிர்மானப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு ஜெயிக்கா நிறுவனத்தின் நிதிஉதவியுடனும் கமநேகும திட்டத்தின் ஊடாகவும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வும் பொதுக்கூட்டமும் நேற்று இடம்பெற்றது.

கல்முனை அல் மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் புதிய சாரணர் குழு அங்குரார்ப்பணவைபவம்!

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் புதிய சாரணர் குழு அங்குரார்ப்பணவைபவம் இடம்பெற்றது. இதன்போது அப்பாடசாலையின் சாரணிய வளர்ச்சிக்காக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று – கல்முனை உதவி மாவட்ட சாரண ஆணையாளருமான எஸ்.எல். முனாஸ் நிதியுதவி வழங்கினார்.
மேற்படி பாடசாலையின் சாரண பொறுப்பாசிரியரும் மாவட்ட சாரண தலைவருமான எஸ்.எம்.எம்.றம்ஸான் ஒழுங்கு செய்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட எஸ்.எல்.முனாஸ் பாடசாலையின் சாரணர் வளர்சிக்கான நிதியின் காசோலையை பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.பரீட் அவர்களிடம் வழங்கியதுடன் திறமைகளை வெளிக்காட்டிய புதிய சாரணர்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கினார்.

கல்முனை வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொம்டெக் நிறுவனத்தில் இலவச பயிற்சி கருத்தரங்கு!


கல்முனை வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொம்டெக் நிறுவனத்தில் இலவச பயிற்சி கருத்தரங்கு!
கல்முனை கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் அமைந்துள்ள கொம்டெக் உயர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
கொம்டெக் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீலின் அனுசரணையுடன் முழுநாள் செயலமர்வாக இடம்பெற்ற இக்கருத்தரங்கில் நூற்றுக்கு மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் பங்குபற்றினர். அட்டளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இக்கருத்தரங்கில் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

நிந்தவூர் வைத்தியசாலையை மாகாண தள வைத்தியசாலையாக தரமுயர்த்த முதலமைச்சர் இணக்கம்!


நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை சகல வசதிகளும் கொண்ட மாகாண தள வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருடனான சந்திப்பின்போதே முதலமைச்சர் இந்த இணக்கப்பாட்டை வெளியிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி எம்.ஐ எம்.மாஹிர், அபிவிருத்திக் குழு பிரதித் தலைவர் நஸீர் அஹ்மத், பொருளாளர் ஏ.எல்.அன்வர்தீன், டாக்டர் ஜாபீர், டாக்டர் றசீட் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Sunday, June 17

சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகளிர் வித்தியாலய வைர விளாவையிட்டு அதிபர்கள் கௌரவிப்பு நாளை



 சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகளிர் வித்தியாலய வைர விளாவையிட்டு கல்லூரியில் இதுவரை அதிபர்களாக கடைமை ஆற்றியவர்களையும், சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வு நாளை(18) ஆம் திகதி திங்கட் கிழமை வித்தியாலய அதிபர் .எல்..ரஹீம் தலைமையில் நடைபெறவுள்ளது.

கிழக்கில் எந்த பிரதேசத்திலும் அரசாங்கத்தின் மீது திருப்திகரமான நிலை இல்லை: அமைச்சர் ஹக்கீம்



(எம்.பரீட்)
'கிழக்கு மாகாணத்திற்கு கடந்த ஓரிரு மாதங்களாக பல பிரதேசங்களுக்கு அடிக்கடி போய் வந்த கொண்டிருக்கின்றேன். கிழக்கில் எந்த முஸ்லிம் பிரதேசங்களிலும் அரசாங்கத்திற்கு திருப்திகரமான நிலையில் இல்லை. அரசாங்கத்தின்மீது திருப்திகரமாக இருப்பதாக யாரும் சொல்வர்களானால் அது மகா புளுகாகவே இருக்கும். இதனை நான் சொல்லித் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. எல்லோருடைய மனச் சாட்சியைத் தொட்டுத் தெரிந்து கொள்ள முடியும்' என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Saturday, June 16

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஒரு நன்றி கெட்டவர்: அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி



பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஒரு நன்றி கெட்டவர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான றஊப் ஏ மஜீதின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் பௌசி,
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஒரு நன்றி கெட்டவராக நடந்து கொண்டார். எனது பெயரை காத்தான்குடியிலுள்ள வீதி ஒன்றுக்கு வைக்கப்பட்டது. எனது பெயரிலான அந்த வீதியின் பெயரை அவர் மாற்றியுள்ளார்.

கிழக்கில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதாயின் சில நிபந்தனைகளை மு.கா. விதிக்கும்! ஹக்கீம்



எதிர்வரும் தேர்தல்களின் போது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சியின் செயற்குழுவே தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அவ்வாறு இணைந்து போட்டியிடுவதாயின் தமது கட்சி அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளை விதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களின் போதும் தமது கட்சி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கான சூழ்நிலைகளே தற்போது காணப்படுகின்றன என்றும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவர்!- ஸ்ரீலங்கா மு.கா அறிவிப்பு

 
கிழக்கு மாகாணத்தில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதனால் முதலமைச்சர் வேட்பாளர் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவராக இருப்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இக்கூட்டம் பொத்துவிலில் இடம்பெறவுள்ளது.
இதில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கிழக்கு தேர்தல் தொடர்பில் SLMC முக்கிய கூட்டம்

 

கல்முனை செய்தியாளர் :கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று (16) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இக்கூட்டம் பொத்துவிலில் இடம்பெறவுள்ளது.
இதில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா இல்லையா என இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீடம் கூடி இறுதி முடிவு எடுக்கும். அதிக முஸ்லிம் வாக்காளர்கள் காணப்படும் கிழக்கு மாகாணத்தில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதானால் முதலமைச்சர் வேட்பாளர் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவராக இருப்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘எஸ்.எச்.எம்.ஜெமீல் பிரத்தியேக நூலகம்’ திறப்பு!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.எச்.எம்.ஜெமீல் தமது நூற்சேர்க்கைகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
நூலகர் எம்.எம். றிபாய்டீன் தலைமையில் நடைபெற்ற இந்நூற்சேர்க்கை கையளிப்பு விழாவில் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.முகம்மது இஸ்மாயில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.மௌனகுரு, கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.

கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுகளில் புதிய அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் 17ஆம் திகதி

அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வின் ஒரு கட்டமாக கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுகளில் புதிதாக அமைக்கப்படவுள்ள வீதிகள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் நடுதல் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையின் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

உலமாக்கட்சித் தலைவர் மௌலவி முபாரக் அரசாங்க புலனாய்வு பிரிவினரால் விசாரணை


முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்பாக அரசாங்க புலனாய்வு பிரிவினர் தகவல் கேட்டமை தொடர்பாக உலமாக்கட்சித் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் விடுத்த ஊடக அறிக்கை தொடர்பாக பொலிசார் அவரிடம் விளக்கம் பெற்றுள்ளனர்.

அறிக்கை ஊடகங்களில் வெளிவந்த அடுத்த இரு தினங்களில் கல்முனைப் பொலிசார் மௌலவி முபாரக்குடன் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றில் ஒலுவில் கேசாங்கேணி கிராமத்தவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்


தமது நடமாடும் உரிமை மட்டுப்படுத்தப்படுவதாகவும் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்காக தம்மை தமது காணிகளிலிருந்து வெளியேற்றவுள்ளதாகவும் முறைப்பாடு செய்து அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை அம்பாறை மாவட்டத்தின் ஒலிவிலில் உள்ள கேசாங்கேணி கிராமத்தவர்கள், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.