Sunday, July 24

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ஏ. பாயில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளால் வெற்றி




கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ஏ. பாயில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.

இத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 2364 வாக்குகள் கிடைத்து்ளது.
வெற்றி பெற்ற மாளிகைக்காட்டைச் சேர்ந்த ஏ.பாயிசுக்கு தனது சொந்த ஊரில்  மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


மாளிகைக்காடு அந்நூர் ஜும் ஆ பள்ளிவாசலில் விசேட துவாப்பிரத்தினையும் இடம்பெற்றது. இவ்வரவேற்பு நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலும் கலந்து கொண்டார்.
கடந்த காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எம்.எச்எம்.இஸ்மாயில் வெற்றி பெற்று காரைதீவு பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவராக கடமை புரிந்தார்.
காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு முஸ்லிம் உறு்பினர் ஏ. பாயிஸ் என்பது குறிப்பிடத்தக்கது







No comments:

Post a Comment