Wednesday, July 27

சம்மாந்துறையில் குடிசைகள் தீக்கிரை

புதன்கிழமை, 27 ஜூலை 2011 12:01
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புர கிராமத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தற்காலிகமாக அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த 15  குடிசைகள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில்  இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.


கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் சுனாமினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்மாயில்புர கிராமத்தில்  தற்காலிகமாக 150க்கும் மேற்பட்ட குடிசைகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தன.


No comments:

Post a Comment