Thursday, July 28

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள விளம்பர பலகைகளில் அழிக்கப்பட்ட அரபு எழுத்துக்கள்...


o                                                       

காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள வீதிகளுக்கு நகர சபையினால் பெயரிடப்பட்ட விளம்பர பலகைகளில் அரபு எழுத்துக்கள் இனந்தெரியாதோரினால் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த வீதி விளம்பர பலகைகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் வீதியின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதில் அரபு எழுத்து மாத்திரம் இனந்தெரியாதோரால் அழிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமெனவும் யார் இதை அழித்தார்கள் என்பது தொடர்பில் எமக்கு இன்னும் தெரியவில்லை எனவும் நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் கூறினார்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ்  நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். (எம்.சுக்ரி)






No comments:

Post a Comment