Wednesday, September 14

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரசியல் தலையீடு: எதிர்த்து ஆர்ப்பாட்டம்


அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரசியல் தலையீடு: எதிர்த்து ஆர்ப்பாட்டம்September 14, 2011  01:30 pm
கல்முனைப் பிரதேசத்திலுள்ள அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிருவாகத்தில் அரசியல் தலையீடு இடம்பெற்று வருவதைக் கண்டித்து வைத்தியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று வைத்தியசாலை வளாகத்தினுள் இடம்பெற்றது.

இதேவேளை வைத்தியசாலை வைத்தியர்களால் நோயாளிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட ஒருசிலரால் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டமொன்றும் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வைத்தியசாலையில் கடமை புரியும் தாதியர்களும், ஏனைய ஊழியர்களும் ஆதரவு வழங்கினர்.

No comments:

Post a Comment