Wednesday, September 14

பல்கலைக்கழக மாணவர்களின் தொழில்வாண்மை அபிவிருத்தி எனும் தலைப்பில் இடம் பெற்ற செயலமர்வு பயிற்சிநெறி





Wednesday, September 14, 2011
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் வழிகாட்டி நிலையத்தின் பல்கலைக்கழக மாணவர்களின் தொழில்வாண்மை அபிவிருத்தி எனும் தலைப்பில் இடம் பெற்ற செயலமர்வு பயிற்சிநெறி இன்று பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் அந்நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.ஏ.எம். நுபைல் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரித்தானிய தொழிநுட்ப நிறுவனத்தின் விரிவுரையாளர் ஈஸ்ஸா உமர் ஷெரிப் பிரதம அதிதியாகவும், நிந்தவுர் ஸி.ஓ.-லெஸ்தக்கீர்  கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் ஐ.எம்.இஸ்ஸடீன் மற்றும் , விரிவுரையாளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்

இதற்கான அனுசரையினை நிந்தவுர் ஸீ. ஓ. -லெஸ்தக்கீர் சர்வதேச கல்வி நிறுவனத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment