Wednesday, October 19

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்சியடைந்த மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மாணவிகளுக்கு பியசேன எம்.பி. பாராட்டு




அண்மையில் வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைதீவு கோட்டத்தைச் சேர்ந்த மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவித்து அவர்களுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கி வைப்பதற்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன அண்மையில் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நளீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளான ஏ.ஆர்எம்.அப்ராபாணு இ ஏ.எல்.எப்.பஸ்ரின் ஆகியோரையும் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் உள்ளிட்ட ஏனைய ஆசிரியர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் பாராட்டியதுடன் பரிசுகளையும் வழங்கி வைத்தார்.






No comments:

Post a Comment