Tuesday, November 22

கல்முனையில் தற்போது பலத்த மழை

 


 
தற்போது கல்முனை பிரதேசம் முழுவதும் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்துவருவதனால் நகரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நேற்று இரவு பலத்த இடி மற்றும் மின்னலுடன் பெய்த மழையினால் நகரின் பெரும்பாலான வீதிகளில் போக்குவரத்து செய்வதில் பொதுமக்கள் பலவித சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதேவேளை செய்லான் வீதி, சின்னத்தம்பி வீதி, மதரஸா வீதி, மாதவன் வீதி, சந்தை வீதி, கோயில் வீதி, மாரியா வீதி, நகர மண்டப வீதி, இன்னும் பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் டெங்கு நோய் பரவக்கூடிய ஆபத்து இருப்பதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment