Monday, March 25

கல்முனையில் ஹர்த்தாலை கைவிடும்படி பொலிசார் வேண்டுகோள்

கல்முனை பிரதேசத்தில் தற்பொழுது இடம்பெற்றுவரும் முழு கடை அடைப்பு போராட்டத்தை கைவிடுமாறு கல்முனை பொலிசார் பள்ளிவாசல்கள், வர்த்தக சங்கப் பிரதிநிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான விசேட கூட்டம் இன்று காலை கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளிவ். ஏ. கப்பார் தலைமையில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள்
பலர் கலந்துகொண்டனர்.

இதுபோன்ற சந்திப்புகளை கல்முனை பிரதேசத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன்  நடாத்தவுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment