Monday, March 25

கிழக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால்

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. பாடசாலைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் தவிர்ந்த அனைத்து தனியார் வர்த்தக நிலையங்களும் வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பேரினாவதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டித்து சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்துமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு வேண்டுகோள்விடுத்திருந்தது. இதற்கமைவாகவே இன்று முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்றைய தினம் முஸ்லிம்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்கக் கூடாது என பாதுகாப்பு தரப்பினரால் பல்வேறு அழுத்தங்களும் வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கிழக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment