ஜெய்கா
திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாண சபை ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற வீதி
அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸோ
மாகாண அமைச்சர் உதுமாலெப்பையோ உரிமை கோர முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை
உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம்
அரசியல் முகவரிகளை பெற்றுக் கொண்ட இந்த அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்தின்
உரிமைகள், அபிலாஷைகள், பாதுகாப்பு மற்றும் இருப்பு தொடர்பில் சற்றும்
அக்கறையற்ற நிலையில் அபிவிருத்திக் கோஷம் எழுப்புகின்றனர்.
அத்துடன், முஸ்லிம் காங்கிரஸையும் அதன்
தலைவர் ரவூப் ஹக்கீமையும் விமர்சித்து வருவதானது மிகவும் கண்டிக்கத்தக்கது’
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.











