
இந்நிகழ்வில் உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர்; எஸ்.எம்.எம். இஸ்மாயில் சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இளம் இரத்தங்களோடு போராட வேண்டியுள்ளது. அத்துடன், நூற்றுக்கு மேற்பட்ட கல்விமான்களோடு எங்களது கருத்துக்களை மெய்பித்து அதனை செயற்படுத்திக் காட்டவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அதற்கு மேலாக நிருவாக ரீதியான சில அணுகுமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அத்துடன் அங்கு வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்களோடு ஒரு இயல்பு நிலையான தொடர்புகளை வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது. இதற்கு மேலாக, சமூக அழுத்தங்கள் அரசியல் அழுத்தங்கள் மற்றும் மேலாதிக்க செயற்பாட்டாளர்களின் அழுத்தங்கள் போன்றவற்றுக்கு நாங்கள் அடிபணிந்து அல்லது அவர்களது அழுத்தங்களின் மத்தியில் தான் தொழிலாற்ற வேண்டியுள்ளது.