Thursday, November 17

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சைக்கு விசேட பிரிவு


கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நவம்பர் 14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு சிகிச்சைக்கென விசேட பிரிவொன்று வைத்தியசாலையின் நான்காம் விடுதியில் வைத்திய அத்தியட்சகர் கலாநிதி டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்நிகழ்விற்கு வைத்தியசாலையின் வைத்தியர்கள் , தாதியர்கள், ஊழியர்கள், உத்தியோகஸ்த்தகர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Wednesday, November 16

கல்முனை MPCS இயக்குனர் சபை உறுப்பினராக முபாறக் மௌலவி நியமனம்

MubarakAMajeed
Wednesday, 16 November 2011
வரையறுக்கப்பட்ட கல்முனை பல நோக்கு கூட்டறவு சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளரும் உலமா கட்சியின் ஸ்தாபகருமான முபாறக் அப்துல் மஜீத் மௌலவி நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமாகிய எம்.சி.எம்.செரீப் அவர்களினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பல நோக்குக் கூட்டுறவு சங்கங்கள் யாவும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அவர்களின் அமைச்சின் கீழ் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 15

கல்முனையில் தேசிய மரநடுகை

 




நாடளாவிய ரீதியில் நடை பெற்ற தேசிய மர நடுகை வைபவத்தில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.ஜே.லியாகத் அலி உட்பட அதிகாரிகளும் ,கல்முனை பிர தேச செயலாளர் எம்.எம்.நௌபல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மாநகர சபை வளாகத்திலும், பிரதேச செயலக வளாகத்திலும் மரம் நடுவதை காணலாம்




ஜனாதிபதி மஹிந்தவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு பூராவும் 11 இலட்சம் மரக்கன்றுகள்; சாய்ந்தமருதிலும் வைபவம்


Slide3ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65ஆவது பிறந்த தினம் மற்றும் ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருட பூர்த்தி என்பவற்றை முன்னிடடு தயட்ட செவன திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 11 இலட்சம் பயன்தரு மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன. இதன் பிரகாரம் அம்பாரை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர்களின் தலைமையில் மரநடு நிகழ்வுகள் இடம்பெற்றன.

Monday, November 14

அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட பெண்கள் சாரணியா்களின் முதலாவது ஒரு நாள் ஒன்று கூடல்

அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரணிய சங்கத்தின் பெண்கள் சாரணியா்களின் முதலாவது ஒரு நாள் ஒன்று கூடல் பயிற்சிப் பாசறை நிகழ்வு கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் இடம் பெற்றது.
 
 

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நீல் டி அல்விஸ்


Ampara_district_Mapஅம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நீல் டி அல்விஸ் இன்று திங்கட்கிழமை மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னர் வடமத்திய மாகாண சபையின் பிரதி செயலாளராக கடமையாற்றிய இவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தராவார்.

புதிய அரசாங்க அதிபரை வரவேற்கும் வைபவம் இன்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் உதவி அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. இதில் மதத்தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக பல வருட காலமாக கடமையாற்றிய சுனில் கன்னங்கர இரத்தினபுரி மாவட்டச் செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this post

கல்முனை சாஹிராவில் அகில இலங்கை பாடசாலை உதைபந்தாட்டப் போட்டி



Slide2இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் பத்தொன்பது வயதுக்கு கீழ்பட்ட அகில இலங்கை ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாம் கட்டம் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை பஸ்தரிப்பு நிலைய கடைகளுக்கும் நற்பிட்டிமுனை சந்தைக் கடையறைகளுக்கும் திறந்த கேள்விப்பத்திரம் கோரப்பட்டு வழங்கப்படும்

siras
(நமது நிருபர்)
பொதுமக்களின் நலன் கருதியும், கல்முனை மாநகரசபையின் வருமானத்தினையும் கருத்திற் கொண்டு தற்போதைய பஸ்தரிப்பு நிலைய கடைகளுக்கும் நற்பிட்டிமுனை சந்தைக் கடையறைகளுக்கும் திறந்த கேள்விப்பத்திரம் கோரப்பட்டு ஆகக் கூடிய கேள்வி உள்ளவர்களுக்கு வழங்க விரைவான நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என கல்முனை மாநகர சபையின் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் கல்முனை வர்த்தக சங்கத்தினருடனான சந்திப்பில் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் உலக நீரிழிவு தின நிகழ்வுகள் (படங்கள்)

சம்மாந்துறையில் உலக நீரிழிவு தின நிகழ்வுகள் (படங்கள்)

 

November 13, 2011 07:02 pm
Bookmark and Share
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நீரிழிவு நோய் தொடர்பாக விழிப்பூட்டும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.

வைத்தியசாலை முன்றலிலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு வீதி ஊர்வலம் பிரதான பாதை வழியாக அப்துல் மஜீத் மண்டபத்தை சென்றடைந்தது.

இதன்போது விழப்புணர்வுக் கண்காட்சி, பொது மக்களுக்கான இலவச குருதி அமுக்கப் பரிசோதனைகள், விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் என்பனவும் இடம்பெற்றது.

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர்.ஏ.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹாநாயக்க உட்பட வைத்தியர்கள்,தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விக்கிலீக்ஸ் இணைய சர்ச்சையில் உள்ள அம்பாறை அரச அதிபர் இரத்தினபுரிக்கு இடமாற்றம்

விக்கிலீக்ஸ் இணைய சர்ச்சையில் உள்ள அம்பாறை அரச அதிபர் இரத்தினபுரிக்கு இடமாற்றம்

 

 
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கரா உடனடியாக இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபராக பொது நிருவாக அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராக வடமத்திய மாகாண பிரதிப் பிரதம செயலாளராக கடமையாற்றிய இலங்கை நிருவாக சேவையின் மூத்த அதிகாரி நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நாளை 14ம் திகதி திங்கட்கிழமை கடமையேற்றவுள்ளார்.

2007ம் ஆண்டு முதல் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சுனில் கன்னங்கரா 2010 ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை அமெரிக்க தூதுவர் பெட்ரிஸியாவிடம் தெரிவித்ததாக´விக்கிலீக்ஸ்´ இணையதளத்தில் செய்தி வெளியானதையடுத்து விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saturday, November 12

கல்முனை முதல்வரை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டும் விழா

 

கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் விழா நேற்று இரவ சாய்ந்தமருது பீச் பார்க்கில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் சட்டத்தரணி எம்.சீ.ஏ.அசீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹகீம் பிரதம அதிதியாக பங்கேற்றார். கௌரவ அதிதிகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாணசபை
உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீட் மற்றும்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், வர்தக சங்க பிரதிநிதிகள், கல்விமான்கள், உயரதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்ட மீறல் எட்டு மாதத்தில் 45 இலட்சம் ரூபா அறவீடு


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த எட்டு மாதங்களில் போக்குவரத்துச் சட்டங்களை மீறியோரிடமிருந்து 45 இலட்சம் ரூபா அதே இடத்தில் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரைக்குமான தண்டப்பணமாகவே இத்தொகை பெறப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வீசாவில் வந்து கல்முனையில் ஆடை வியாபாரம் செய்த 6 இந்தியர்கள் கைது!

 
[ வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011, 02:28.54 PM GMT ]
சுற்றுலா விசாவில் இலங்கை வந்து கல்முனை நகரில் வீதியோரங்களில் ஆடை வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 6 இந்தியர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை – மல்வத்தை முகாம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதன் பொருட்டு கைது செய்யப்பட்டவர்கள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களை இன்று கல்முனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Friday, November 11

கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் விழா

Friday, November 11, 2011

 

கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை சாய்ந்தமருது மண்ணும் மக்களும் பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் விழா இன்று மாலை 4 மணிக்கு சாய்ந்தமருது பீச் பார்க்கில் இடம்பெறவுள்ளது.
 

சாய்ந்தமருதில் சட்டசேவையும், விளிப்புணர்வுச் செயலமர்வும்

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருதில் சட்ட சட்டசேவையும் விளிப்புணர்வுச் செயலமர்வும் எதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.30 தொடக்கம் 12.00மணி வரைக்கும் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடை பெறவுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் சட்டத்தரணி எம்.ரீ.சபீர் அஹமட் தெரிவித்துள்ளார்.