Monday, May 7

கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல்

kalmunai-wd-2
கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாடு தொடர்பாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் பற்றி சுகாதார பிரிவு ஊழியர்களுடன் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று (03.04.2012) கலந்துரையாடினார்.
இதன்போது திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டை திறன்பட மேற்கொள்வதில் சுகாதார பிரிவு ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு முதல்வரினால் அவற்றிற்கான தீர்வுகள் பெறப்பட்டன.

கல்முனை மாநகர முதல்வருக்கும் ஐக்கிய வணிகர் அமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கும் ஐக்கிய வணிகர் அமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு முதல்வர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம். வலீத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ் பிரதேசங்களில் காணப்படும் பிரச்சினைகள் சம்மந்தமாக விரிவாக ஆராயப்பட்டது. இதுவிடயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஐக்கிய வணிகர் அமைப்பினரால் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.

செப்டம்பரில் கிழக்கு மற்றும் இரு மாகாண சபைகளுக்கான தேர்தல்

கிழக்கு மாகாண சபை, சம்பிரகமுவ மாகாண மற்றும் வடமத்திய மாகாண சபை ஆகியவற்றின் தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கையின் தேர்தல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியிருந்தார்.

Saturday, May 5

ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் எம்.சீ.ஆதம்பாவா சட்டத்தரணி பரீட்சையில் சித்தி

சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு வாழ்த்து

பிரபல கல்விமானும் சமூகசேவையாளருமான ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் எம்.சீ.ஆதம்பாவா, சட்டத்தரணி பரீட்சையில் சித்தி பெற்றமையை சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு பாராட்டி வாழ்த்துத் தெரிவிததுள்ளது.

கல்வித்துறையிலும் சமூகசேவையிலும் இனநல்லுறவிலும் மிகுந்த அர்ப்பணிப்புடனும்,தியாகத்துடனும், நேர்மையுடனும் செயற்பட்டுவரும் அல்ஹாஜ் எம்.சீ.ஆதம்பாவா அவர்களின் விடாமுயற்ச்சிக்குக் கிடைத்த வெற்றி எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு ஓரு முன் உதாரணமாக
விளங்கும் என சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.
 
 

தம்புள்ள பள்ளியை அகற்ற முயன்றமைக்காக பௌத்தன் என்ற வகையில் வெட்கப்படுகிறேன்


எனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் காக்கிச் சட்டையைக் கழற்றி விட்டு பதவியையும் இராஜினாமா செய்வேன் என அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல தெரிவித்தார்.
உருவ வழிபாடற்ற உள்ளத்தையும் சிந்தயையும் ஒருமுகப்படுத்தி ஏக இறைவனை வணங்குபவர்கள் முஸ்லிம்கள் மாத்திரமே. உண்மையில் இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கமாகும் ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி அண்மையில் வரிப்பத்தான்சேனைஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்விலும் துஆப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது, முஸ்லிம்களின் வேத நூலான புனித அல்குர்ஆனை நான் படித்து வருகின்றேன். முஸ்லிம்களின் சமய விடயங்களை தினமும் விளங்கி வருவதுடன் அவர்களின் சமயத் தலங்களையும் தரிசித்து வருகின்றேன். புனித மக்கா நகர் செல்லவும் பேரவா கொண்டுள்ளேன். மரணித்தவுடன் எவ்வித தாமதமுமின்றி ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் முஸ்லிம்களின் பணியை ஏனைய சமயத்தவர்கள் இன்று வரவேற்றுப் பேசுகின்றனர்.

Wednesday, April 25

கிழக்கு மாகாணத்தில் 327 பேருக்கு ஆசிரியர் நியமனம்; இன்று வழங்கப்பட்டது!

கிழக்கு மாகாணத்தில் 327 ஆசிரியர் நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் இன்று கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக தலைமையில் திருகோணமலை விவேகானந்த கல்லுரியில் நடைபெற்றது.


கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பயின்ற 327ஆசிரியர் நியமனங்களில் 256 தமிழ் மொழி மூலமும் 71 ஆசிரியர்கள் சிங்கள மொழி மூலமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் மௌலவி ராஜினாமா!


1231

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் அப்துல் மஜீத் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவரான அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

தம்புள்ள சர்ச்சை: ஸ்ரீ.ல.மு.கா நிலை என்ன? துணைச் செயலாளர் நிசாம் காரியப்பர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்து!

nizam-01
BBC TAMIL
இலங்கையின் தம்புள்ள நகரிலுள்ள ஒரு பள்ளிவாசலும் அதன் அருகிலுள்ள ஒரு காளி கோவிலும் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்று உள்ளூர் புத்த பிக்குகள் போராடி வருகின்றனர்.Audio

அப்பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படாவிட்டால், அது பலவந்தமாக அகற்றப்படும் என்று பிக்குகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்நிலையில் இலங்கையின் மிகப்பெரிய முஸ்லிம் கட்சியும் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியுமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இச்சம்பவம் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், அந்தப் பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் அரசின் மீது அழுத்தங்களை கொடுக்கவில்லை என்றும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்தும், இலங்கை முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணைப் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.

தம்புள்ள சர்ச்சை- ஸ்ரீ.ல.மு.கா நிலை என்ன? நிசாம் காரியப்பர்(Click Here)

Friday, April 13

சவளக்கடை கைரியா பள்ளிவாசலுக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீலினால் நீர் விநியோக பவுசர் அன்பளிப்பு!

3அம்பாறை மாவட்டத்திலுள்ள மத்திய முகாம் சவளக்கடை அல்-மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான நீர் விநியோக பவுசர் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளார்.

சாய்ந்தமருது முபிதா உஸ்மானுக்கு சிறந்த பெண் விருது!


1சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சிறந்த பெண்னாகவும் அம்பாறை மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலை vசிறப்பு விருதையும் கலாபூசனம் ஜனாபா முபிதா உஸ்மான் பெற்றுள்ளார். பெண்கள் அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய மகத்தான சேவைக்காகவே இவ்விருதுகள் வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட செயலகம் நடத்திய சர்வதேச பெண்கள் தின வைபவத்தில் மாவட்ட செயலாளர் திரு நீல் டி.அல்விஸ் அவர்களினால் கலாபூசனம் முபிதா உஸ்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
 

Thursday, April 12

கல்முனையில் உஸ்தாத் M.A.M.மன்ஸூர் அவர்களின் "குர்ஆனை கற்றல் தொடர்பான விரிவுரையும் கலந்துரையாடலும்" - (2012.04.14)











kjpg;gpw;Fupa ,];yhkpa rfhju rNfhjupfSf;F>

m];]yhK miyf;Fk; tw`;kJy;yh`p tgufhJ`{

tpupTiuAk; fye;JiuahlYk;

mf;Fwiziaj; jiyikafkhff; nfhz;baq;Fk; my;-FHMd; fw;iffSf;fhd jpwe;j fy;Y}up > ,yq;ifapd; gy ghfq;fspYk; gy;NtW ,];yhkpa fw;if newpfis njhiyf;fy;tp (Distance Education ) %yk; elhj;jp tUtjid ePq;fs; mwpe;jpUg;gPHfs;.

,f;fy;Y}upapd; gzpg;ghsH> [hkpah esPkpa;ahtpd; Kd;dhs; rpNu];l tpupTiuahsH c];jhj; M.A.M.kd;]_H mtHfspdhy; my;-FHMidf; fw;wy; njhlHghd tpupTiuAk; fye;JiuahlYk; eilngwTs;sJ.

,lk;:- fK/k`;%j; kfspH fy;Y}up> fy;Kid.

fhyk;:- 2012.04.14 (rdpf;fpoik)

epfo;r;rp epuy;:- 1. gp.g.02.30 - 04.00   kPl;ly; tFg;G - jg;]PH bg;Nshkh 1k;khj ]_whf;fs;

     (njhiyf;fy;tp ghlnwpapid gapy;NthUf;fhdJ)

 


2 gp;.g. 04.15 06.15 nghJ tpupTiuAk; fye;JiuahlYk;

·         my;- FHMid; fw;wYf;fhd topfhl;ly;fs;

·         [{];c mk;k R+whf;fis fw;wypd; mtrpaKk;> topKiwfSk;.

·         my; - FHMd; jpwe;j fy;Y}up gw;wpa XH mwpKfk;



Nkw;gb epfo;tpy; jhq;fSk; fye;J rpwgg;gpf;FkhW md;Gld; miof;fpd;N;whk;.

cq;fsJ tutpid cWjpg;gLj;j 0772320558 f;F SMS %yk; cq;fsJ ngaiu mDg;gTk;.



t];]yhk;.

- Vw;ghl;Lf; FO>

mk;ghiu gpuhe;jpak;



Fwpg;G: c];jhj; M.A.M.kd;]_H mtHfSldhd tpNrl NeHfhzy; epfo;r;rp 2012.04.14

       (rdpf;fpoik) fhiy 10.30 11.00 kzp tiu gpiw F.M. ,y; ,lk; ngwTs;sJ

Monday, February 20

நாடு, நகர சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசிடம் ஆட்சேபம் தெரிவிப்பு

கிழக்கு மாகாண சபையில் நாளை திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நாடு மற்றும் நகரத் திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களே இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

நாடு மற்றும் நகர திருத்த சட்டமூலம்; முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு

SLMC logo 1_CI
நாடு மற்றும் நகர திட்டமிடல் திருத்த சட்டமூலத்தை எதிர்ப்பது என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என அக்கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.

சாய்ந்தமருது வைத்தியசாலையில் எக்ஸ்றே பிரிவு!

Doctor examining chest X-ray filmsசாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட எக்ஸ்றே பிரிவை திறந்து வைக்கும் வைபவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ரீ.இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.




Saturday, February 18

எஸ்.ஜனூஸ் எழுதிய தாக்கத்தி கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா




எஸ்.ஜனூஸ் எழுதிய தாக்கத்தி கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா ஞானக்கவி எஸ்.நிஜாமுதீன் தலைமையில்
இம்மாதம் இருபதாம் திகதி காலை ஒன்பது மணிக்குகல்முனை  மஹ்மூத் மகளிர் கல்லூரி
மண்டபத்தில் இடம்பெறுகிறது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர்
கலாநிதி முஹம்மது சிராஸ் மீராஷாஹிப் கலந்து கொள்வதோடு இன்னும் பல சிறப்பு அதிதிகளும்
வருகை தரவிருக்கிறார்கள். தாக்கத்தி கவிதைத்தொகுதி வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து 
முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கவிஞர் அலியார் பீர்முஹம்மது தலைமையில்
சிறப்புக் கவியரங்கமும் இடம்பெறவுள்ளது. இக்கவியரங்கில் ஏ.எம். தாஜ் , எஸ்.ரபீக் ,
கிண்ணியா அமீரலி , ரி.இஸ்மாயில் ,பொத்துவில் அஸ்மின் , மருதமுனை விஜிலி, சுகைதா ஏ. கரீம் ஆகியோர்
கவிதை பாடவிருக்கிறார்கள்.
 20.02.2012 திங்கள்கிழமை..காலை 09மணிக்கு

இடம்.கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி
சேர்.ராஸிக் பரீத் மண்டபம்

பிரதம அதிதி..கலாநிதி,முகம்மத் சிராஸ் மீராசாஹிப்(கல்முனை முதல்வர்)
கௌரவஅதிதி...ஐ..எல்.. முகம்மது சலீம்(பிரதேசசெயலாளர்..சாய்ந்த்தமருது)

தலைமை...ஞானகவிஞர் எஸ்.நிஜாமுதீன் (முன்னால் பிரதிஅமைச்சர்)

வரவேற்புரை (கலைமகள் ஹிதாயா றிஸ்வி அமைப்பாளர் தாடகம் கலை இலக்கிய வட்டம்)
நூலும் நூலாசிரியரும் ..( ஜெஸ்மி .எம். மூஸா)
தாக்கத்தி ...மீதான கூர்திட்டல்( எம்.நவாஸ் செளபி )
சானை பிடித்தல்... (நபீல், கிண்ணியா அமீர் அலி)
ஏற்புரை...நூலாசிரியர் எஸ் . ஜனூஸ்

சிறப்பு கவியரங்கம்
தலைமை...அலியார் பீர் முஹம்மத்(முன்னால் மாவட்ட கல்வி அதிகாரி)
கவியரங்கு பாவலர்கள்
ஏ. எம். தாஜ் (தென்றல் வானொலி)
எஸ்.ரபீக் (பிறைவானொலி)
கிண்ணியா அமீர் அலி
ரீ. இஸ்மாயில்( பொறியலாளர்)
பொத்துவில் அஸ்மின்
மருதமுனை விஜிலி
மூதூர் சுகைதா .ஏ. கரீம்
தாடகம் விருது 2012
கலையுலகில்ஆற்றி வந்த கலை இலக்கிய; சமூக சேவைக்காக தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி சார்பில்''அகஸ்த்தியர்விருதும்.கலைத்தீபகம்\.சமூகத்தீபம்
பட்டமும் வழங்கி கௌரவிக்கப்படுபவர்கள்

1. கலாநிதி சபாபதி தில்லை நாதன் (முகாமைத்துவப்பணிப்பாளர் வ,ப,விவசாய பொருளாதாரஅபிவிருத்திக் கம்பனி அம்பாறை)
2. அல்ஹாஜ் சம்சுதீன் தஸ்தகீர் (பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகர்,சுகாதாரத் திணைக்களம். கல்முனை.)
3. ஜனாப் சம்சுதீன் சிராஜுதீன் (ஆசிரியர் ஆலோசகர் நட்பிடிமுனை.)
4. ஜனாப் உதுமாலெப்பை அப்துல் லத்தீப் ஜின்னா,j.p., (அரச ஒப்பந்தக்காரர்,தொழிலதிபர்,அக்கரைப்பற்று.)
5. முகம்மது சாதிக் முஹம்மட் நியாஸ்.(அமானா தாகாபுல் லிமிட்டெட்டின் பிராந்திய முகாமையாளர்)
6. அல்ஹாஜ்-ஹனிபா U.L.M. ஹனிபா j.p. (தலைவர் அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம்.தேசிய அமைப்பாளர்)
7. ஜனாப் M.T.M.நெளபல் SLAS.,( BBA (Hons),in pub.management (SLIDA) பிரதேச செயலாளர்,கல்முனை.)
8. S.T. றஊப் (சக்தி முகாமையாளர்).

அம்பாறை மாவட்டத்தின் சகலகலை இலக்கிய உள்ளங்களையும்,நட்பு உள்ளங்களையும்
அன்போடுஅழைக்கின்றோம்
தாடகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர்

தாக்கத்தி இங்கிருக்கு
தத்தி தத்தியாய்
கவிதை அறுவடை
செய்யலாம் வாங்க.......!