
காத்தான்குடியின் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் அழுத்தம் காரணமாக முற்பதிவு செய்யப்பட்டிருந்த ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தினை வழங்க நகர சபைத் தவிசாளர் மறுப்புத் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இயக்கத்தினர் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தின் முன்னால் இயக்கத்தினர், மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒருவாரத்துக்கு முன்னரே மண்டபத்துக்கான முற்பதிவு செய்யப்பட்டபோதும் மண்டபம் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.