Thursday, April 4

கல்முனை பஸ் போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்


கல்முனை மாநகரத்தில் காணப்படுகின்ற தனியார் பஸ் உரிமையாளர்களே தங்களது பஸ் வண்டிகளுக்கான ஆசனப்பதிவினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
தென்கிழக்கு சமூக நல பஸ் உரிமையாளர்கள் அமைப்பு உறுப்பினர்கள், கல்முனை தனியார் வஸ் நிலைய நேரக் காப்பாளர் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கல்முனை டிப்போ அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று (03.04.2013)  இடம்பெற்ற முதல்வருடனான கலந்துரையாடலின்போதே மேற் குறித்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது.     

கல்முனை மேயரால் சாஹிறா தேசிய பாடசாலைக்கு ஒரு தொகுதி கராத்தே உடை அன்பளிப்பு


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் கல்முனை சாஹிறா தேசிய பாடசாலைக்கு ஒரு தொகுதி கராத்தே உடை மற்றும் கை உறை என்பன இன்று(03) முதல்வர் செயலகத்தில் வைத்து  வழங்கிவைக்கப்பட்டது.

அத்தோடு டெக் லேங் ஆங்கில பாலர் பாடசாலையின் பாவனைக்காக ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரைகளும் முதல்வரினால் வழங்கிவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வின்போது மாநகர ஆணையாளர்  ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர் எம்.எல்.சாலிதீன், கல்முனை சாஹிறா தேசிய பாடசாலை அதிபர் ஏ. ஆதம்பாவா, முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யப்பானிய பிரதித்தூதுவர் – கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு


??????????????????????????????? யப்பானிய பிரதித்தூதுவர்  - கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு:கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெண்கள் நிதியம் அமைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த யப்பான் உதவவுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித் அவரின்  முதலமைச்சர் காரியாலயத்தில் 01.04.2013ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கின் அபிவிருத்தி சம்மந்தமாக சந்தித்து கலந்துரையாடிய யப்பானிய பிரதித்தூதுவர் கிரோகி இஸுகா மற்றும் அதிகாரிகளும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
இச் சந்தர்ப்பத்தின் போது கிழக்குமாகாணத்தில் 1983ஆம் ஆண்டிற்கு பின் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவன்மாரை இழந்த விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மறுவாழ்வு அளிக்கும் முகமாக பெண்கள் நிதியம் ஒன்றை நிறுவி  உதவி புரிவதற்கு  யப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் பிரதித்தூதுவர் தெரிவித்தார்.

பொதுபல சேனா தடை செய்யப்பட வேண்டும் - கல்முனை மாநகர சபை தீர்மானம்



நாட்டின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் பௌத்த மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் பொது பல சேனா இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என அரசைக் கோரும் மனுவை கல்முனை மாநகர சபையில் சமர்ப்பித்து எம்.ஐ.பிர்தௌஸ் ஆற்றிய உரை.
மேற்படி பொது பல சேனா என்ற இயக்கம் கடந்த 2012ம் ஆண்டு; மே மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இந்த நாட்டிலுள்ள பௌத்தர்கள் அல்லாத சிறுபான்மை மதங்களுக்கு பல தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக அவ்வமைப்பின் செயலாளர் கலபொல அத்தோஞான சார தேரர் பெருமையாகக் கூறுகின்றார்.
இலங்கை பல் இன மக்கள் வாழ்கின்ற பல இனத்தவர்களுக்கும் சொந்தமான நாடு என்பதை இலங்கைப் பிரஜைகளாகிய நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்கின்றோம். 

கிழக்கில் ஆட்சியை மாற்ற 22 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றோம்.சுபைர்


முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கமானதொரு முடிவினை மிக விரைவில் எடுக்காவிட்டால் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியநிலை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும்’ என்று கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் கூறினார்.

ஏறாவூர் அல் முனீரா பாலிகா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நாட்டில் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தொடர்ச்சியானதும் நன்கு திட்டமிட்டதுமான அடக்கு முறைகளும் தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’ என்றார்.

‘இது தொடர்பில் முஸ்லிம் சமூகம் அரசியல்வாதிகளாகிய எம்மீது கடும் அதிருப்தி கொண்டுள்ளது. நாம் தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது. மக்கள் எங்களை நோக்கி கைகளை நீட்டக்கூடிய நிலை ஏற்படப்போகின்றது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘கிழக்கு மாகாண சபையில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 22 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றோம். கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் ஒரே நோக்கில் சிந்தித்தால் பல்வேறு எதிர்பாராத திருப்பங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்த முடியும்’ என்றார்.

‘இதேவேளை கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு நல்ல தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் நான் பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, April 3

மட்டு கல்லடி பழைய பாலத்திற்கு தற்காலிக பூட்டு




கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கல்லடி பழைய பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  மட்டு கல்லடி பழைய பாலம் புனரமைப்புச் செய்யப்படுவதாலும் அதன் வீதிகள் புனரமைப்புச் செய்யப்படுவதாலுமே இப்பழைய பாலம் மூடப்பட்டுள்ளது.

கிழக்கில் பொதுபல சேனாவின் சூழ்ச்சிகளை பலிக்க விடமாட்டோம் ; நஸீர்


கிழக்கு மாகாணத்தில் பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் குழப்பத்தை ஏற்படுத்தி திட்டமிட்டு செயற்பட விட மாட்டோம். முஸ்லிம் சமூகத்திற்கும் ஏனைய இனங்களுக்குமிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவே திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. அவர்களின் சூழ்ச்சிகள் பலிக்க விடமாட்டோம்.
இவ்வாறு கூறினார் விவசாய கால்நடை, உற்பத்தி அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்.

தமிழ் முஸ்லிம் மக்களிடையே குரோதத்தை வளர்க்கவே ஹர்தால் அழைப்பு – TNA கூட்டாக அறிக்கை


tna new-
நாளை (4.4.2013) மட்டக்களப்பில் ஹர்தால் செய்யுமாறு ஆதி திராவிட சேனா என்ற பெயரில் வெளியிட்ட பிரசுரமானது தமிழ் முஸ்லிம் மக்களிடையே குரோதத்தை வளர்த்து அதில் குளிர்காய நினைப்போரின் சதி நடவடிக்கையாக இருக்குமென சந்தேகிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்ததை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இன்று(3.4.2013) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஹலாலுக்கு ஆதரவாகவும் பொதுபல சேனாவுக்கு எதிராகவும் முஸ்லிம்கள் செய்த கடையடைப்புக்கு எதிராக எதிர் வரும் 4ம் திகதி நாளை கடையடைப்பு செய்யுமாறு ஆதி திராவிட சேனா என்ற பெயரில் மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கல்முனை மீனவர்களுக்கு அச்சுறுத்தல்


ஆழ்கடல் கொள்ளையர்களினால் கல்முனை இயந்திரப்படகு மீனவர்களின்  மீன்கள் வலையுடன் வெட்டப்பட்டு திருட்டுத்தனமாக கொண்டு செல்லப்படுவதோடு அச்சுறுத்தல்கள் மற்றும் உயிராபத்துக்களுக்கும் ஆளாகிவருவதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப்படகு கூட்டுறவு மீனவர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண அரச சேவைக்கான விதிக் கோவை வழங்கும் நிகழ்வு


2 கிழக்கு மாகாண ஆளுநர்  அலுவலகத்தில் மாகாண அரச சேவைக்கான விதிக் கோவை வழங்கும் நிகழ்வு 02.04.2013ஆம் திகதி செவ்வாய்கிழமை (கிழக்கு )ஆளுநர் ரியல் அட்மிரால் மொஹான் விஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது.
இக்கையேடானது கிழக்கு மாகாணசபையின் வரலாற்றில் முதல் முதல் நிர்வாக நடைமுறைகள் நீதி நடைமுறைகள் சம்மந்தமாக விசேட அறிவித்தல் நூலொன்றை வெளியிட்டிருக்கின்றோம் இது பாராட்டப்படக் கூடிய விடயம் எனவும்  “ கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் நிர்வாகத்தை செம்மையாக நடைமுறைப்படுத்த செயல்படுத்த உதவும் எனவும் நம்புகிறேன் ” என ஆளுநர் கூறினார்.
மேலும் இலங்கையில் இது மூன்றாவது வெளியீடு எனக் குறிப்பிட்டவர் ஏற்கனவே சப்பிரகமுவ, மேல்மாகாணங்களில் இவ்வகையான கையேடு வெளியிடிட்ருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
“ இதற்கு முன் இந்த நீதி நிர்வாக நடைமுறைகள் அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் தெரியாத காரணத்தினால் பல்வேறு சிக்கல்களை மாகாணத்தில் அனுபவித்து இருக்கிறோம் ஆசிரிய நியமனம் ஏனைய நியமனங்கள், பதவியுயர்வுகள், விசாரனைகள் சம்மந்தமாக பல்வேறு பிரச்சினைகள் அனுபவிக்கவேண்டியிருந்தது ”

Tuesday, April 2

சாய்ந்தமருது வைத்தியசாலையின் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு


தெயட்ட கிருள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சாய்ந்தமருது வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் பாடசாலை அதிபர்கள், உலமாக்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடமாடும் வைத்திய சேவை ஆரம்பம்


தெயட்ட கிருள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சினால் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரு அம்புலன்ஸ் வாகனங்களை வழங்கப்பட்டன. 
இவ்அம்புலன்ஸ் வாகனங்களை வைத்தியசாலையின் பாவணைக்கு விடுமுகமாக அதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. 
இந்நிகழ்வு வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை ஸாஹிராக் கல்லூரி மாணவன் பயாஸின் ரோபோ தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில்



கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் பேனை மூடிகளினால் தயாரித்துள்ள  மின்கலத்தில் இயங்கும் ரோபோ மற்றும் தன்னியக்க கார் என்பன ”தேசத்திற்கு மகுடம்” கண்கட்சியின் போது முக்கிய இடம்பெற இருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களினால் புத்தாக்கமாக தயாரிக்கப்பட்ட பல பொருட்கள் கல்வி திணைக்களத்தினூடாக சேகரிக்கப்பட்டு அம்பாறை ஹாடி சிரேஸ்ட தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் இம்மாதம் 23 முதல் 29 வரை இடம்பெறவுள்ள
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் எப்.எம்.பயாஸ் என்ற மாணவனின் ஆக்கம் காடசிக்கு வைக்கப்படவுள்ளது.

பொத்துவில் முகுந்து மகா விகாரையில் தீ விபத்து




பொத்துவில் முகுந்து மகா விகாரையில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தீவிபத்தினால் சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியுள்ள பொருட்களும் முக்கிய ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளன.

மின் ஒழுக்கு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடாபாக பொத்துவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக ஹர்தால் அனுஸ்டிக்குமாறு தமிழர்களுக்கு அழைப்பு.

மட்டக்களப்பு, தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 04ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு ஆதி திராவிட சேனன் படையினால் துண்டுப்பிரசுரம் ஒன்று மட்டக்களப்பு நகர தமிழ் வர்த்தகர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விழித்தெழுவீர், தமிழ் சிங்கள சமூகம், சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம் எனும் தலைப்பில் இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:
(விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம். சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம்.)