Saturday, October 22

மறைந்த ஊடகவியலாளர்களான அமரர் கே.என்.தர்மலிங்கம் மற்றும் மர்ஹும் ஏ.எம்.அலிகான் ஆகியோருக்கான கல்முனையில் இரங்கற் கூட்டம்





அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் மறைந்த ஊடகவியலாளர்களான அமரர் கே.என்.தர்மலிங்கம் மற்றும் மர்ஹும் ஏ.எம்.அலிகான் ஆகியோருக்கான இரங்கற் கூட்டமொன்றை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஆசிரியர் ஆலோசகர்களை இணைத்துக்கொள்வதற்காக நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.






 மட்டக்களப்பில் அம்பாறை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாளைய தினம்  இந்தப் போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் தவிர்க்க முடியதாத காரணங்களினால் எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை இந்த பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்


இந்த பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தமக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையை பயன்படுத்தி பரீட்சைக்கு தோற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Friday, October 21

இதயத்தில் வீற்றிருக்கும் முஸ்லிம் தேச தலை நகர மக்களுக்கு நன்றிகள் - பிரதி மேயர் நிசாம் காரியப்பர் ஊர்வலம்


வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஊர்வலமும்  பொதுக் கூட்டமும்  இன்று கல்முனையில் நடை பெற்றது.
கல்முனை  மாநகர பிரதி முதல்வர்  நிசாம் காரியப்பர் தலைமையில் நடை பெற்ற  வைபவத்தில் திரளான கல்முனை மக்கள் கலந்து கொண்டனர் 

மேயர் இழுபறிக்கும் அதன் விளைவுகளுக்கும் கட்சித் தலைமைத்துவமே பொறுப்பேற்க வேண்டும்- விடிவெள்ளி


எனது வெற்றிக்கு பணமும் பிரதேசவாதமுமே காரணம் என்பது திட்டமிட்ட பொய்ப்பிரசாரம்- விடிவெள்ளி


சாய்ந்தமருது ‘கொம்டெக்’ நிறுவனத்தை மூடிவிட மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தீர்மானம்- விடிவெள்ளி



Thursday, October 20

சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலைமாணவர்களுக்கு சான்றிதல்கள்



சாய்ந்தமருது ஜி.எம்.எம்.எஸ்.பாடசாலையிலிருந்து இவ்வாண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத தோற்றி சித்தியடைந்த 5 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 85 மாணவர்களும் அக்கரைப்பற்று உதவும் கரங்கள் அமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இது தொடர்பான வைபவம் பாடசாலை அதிபர் எம்.ஐ.ஏ.கரீம் தலைமையில் நடைபெற்றது.  இவ்வைபவத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நட்பு விழா



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவர்களின் நட்பினை மேம்படுத்துவதற்காக இரண்டாம் வருட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு நேற்று பல்கலைக்கழக ரிவர் பாங்க் பார்க்கில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டார். இதில் பீடாதிபதிகளும் திணைக்களத் தலைவர்களும் விரிவுரையாளர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Wednesday, October 19

கல்முனை அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில் சிறுவர் சந்தை

Wednesday, October 19, 2011

முன்பள்ளி பாடசாலை பாடத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களிடையே ஒழுங்கு செய்யப்பட வேண்டிய சிறுவர் சந்தை ஒழுங்கமைப்பு நிகழ்வின் கீழ் கல்முனை அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில் இன்று செவ்வாய்க்கழமை சிறுவர் சந்தை நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.

அதிபா் எ.எம்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
பாடசாலை ஆசிரியா்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனை மாநகர சபைக்கான மாநகர மேயர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

கடந்த எட்டாந்திகதி நடை பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கல்முனை மாநகர சபைக்கான மாநகர மேயர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
 
கல்முனை மாநகர ஆணையாளர் எம்.ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கல்முனை மக்கள் வங்கி சந்தியில் இருந்து வரவேற்கப்பட்டு அழைத்து வரப் பட்டார்.
மும் மத தலைவர்களின் ஆசியுடன் இடம் பெற்ற இவ்வைபவத்தில் மாநகர சபைக்கு தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாநகர சபை பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட முதல்வர் மாநகர சபை உத்தியோகத்தர்களையும் ஊழியர்களையும் சந்தித்த போது அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
பதவி ஏற்றதன் பின்னர் அங்கு நடை பெற்ற கலந்துரையாடலில் கடந்த தேர்தலின் போது நடந்த சம்பவங்களை மறந்து அனைவரும் மக்களுக்கு சேவை என்ற என்னத்தை கொண்டு செயற்ட் பட வேண்டும் என முதல்வர் சிராஸ் அங்கு தெரிவித்தார்.







2010ம்,2011ம் ஆண்டு கலை சலாச்சார, வர்தக முகாமைத்துவ, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடங்களுக்கான புதிய கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்




 
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார, வர்தக முகாமைத்துவ, இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி ஆகிய பீடங்களில் பதிவு செய்துள்ள புதிய முதலாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 31.10.2011 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார். அறிவித்துள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் 30.10.2011 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு முன்னதாக தத்தம் விடுதிகளில் தமது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்சியடைந்த மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மாணவிகளுக்கு பியசேன எம்.பி. பாராட்டு




அண்மையில் வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைதீவு கோட்டத்தைச் சேர்ந்த மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மாணவர்களை பாராட்டி கௌரவித்து அவர்களுக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கி வைப்பதற்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன அண்மையில் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.ஏ.நளீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளான ஏ.ஆர்எம்.அப்ராபாணு இ ஏ.எல்.எப்.பஸ்ரின் ஆகியோரையும் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் உள்ளிட்ட ஏனைய ஆசிரியர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் பாராட்டியதுடன் பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

Monday, October 17

கல்முனை மாநகர புதிய முதல்வர் கலாநிதி சிராஸுக்கு சாய்ந்தமருதில் வரவேற்பு

SAM_3608
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தெரிவாகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்ட கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கு இன்று சாய்ந்தமருது  நகரில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
சாய்ந்தமருது நகர Gateway -நுழைவாயிலில் இருந்து வரவேற்கப்பட்ட புதிய முதல்வர் கலாநிதி சிராஸ், பிரதான வீதி ஊடாக சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
மாளிகைக்காடு சந்தியிலிருந்து வரவேற்கப்பட்ட புதிய முதல்வர் கலாநிதி சிராஸ், பிரதான வீதி ஊடாக சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. 

SAM_3608




Wednesday, September 14

பல்கலைக்கழக மாணவர்களின் தொழில்வாண்மை அபிவிருத்தி எனும் தலைப்பில் இடம் பெற்ற செயலமர்வு பயிற்சிநெறி





Wednesday, September 14, 2011
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் வழிகாட்டி நிலையத்தின் பல்கலைக்கழக மாணவர்களின் தொழில்வாண்மை அபிவிருத்தி எனும் தலைப்பில் இடம் பெற்ற செயலமர்வு பயிற்சிநெறி இன்று பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் அந்நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.ஏ.எம். நுபைல் தலைமையில் நடைபெற்றது.

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரசியல் தலையீடு: எதிர்த்து ஆர்ப்பாட்டம்


அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரசியல் தலையீடு: எதிர்த்து ஆர்ப்பாட்டம்September 14, 2011  01:30 pm
கல்முனைப் பிரதேசத்திலுள்ள அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிருவாகத்தில் அரசியல் தலையீடு இடம்பெற்று வருவதைக் கண்டித்து வைத்தியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று வைத்தியசாலை வளாகத்தினுள் இடம்பெற்றது.

இதேவேளை வைத்தியசாலை வைத்தியர்களால் நோயாளிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட ஒருசிலரால் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டமொன்றும் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வைத்தியசாலையில் கடமை புரியும் தாதியர்களும், ஏனைய ஊழியர்களும் ஆதரவு வழங்கினர்.