
அரச நிறுவனங்களை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தும் அரசதிட்டத்தின் கீழ் இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முலைத்தீவு, போன்ற மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 75 அரச நிறுவனங்களில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக தொலைத் தொடர்பு தொழிநுட்ப முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.